ஓடும் பேருந்தில் "பீர்" குடித்து அலப்பறை செய்த பள்ளி பருவ சிங்க பெண்கள்

 


அரசு பள்ளி மாணவிகள் பீர் குடித்து பயணிகளை தொந்தரவு செய்தது போன்ற விடியோ தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது. அந்த நிகழ்வை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.


நாம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பீர், புகை பிடிப்பது போன்ற பதிவுகளை பற்றி பார்த்திருப்போம் அல்லது கேட்டு இருப்போம். தற்போது, அதற்கு ஒரு படி மேல் சென்று மாணவிகள் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த செயல் செங்கல்பட்டு மாவட்டம் திருகழுக்குன்றம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இந்த செயல் செய்து இருப்பது என்று கூறப்படுகிறது. இதில், அந்த பள்ளி மாணவிகள் பள்ளி சீருடையில் இருப்பது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாணவிகள் மாறி, மாறி பீர் குடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதையும் படியுங்கள்:

குழந்தைகள் போடும் டிரெஸ்ஸை போட்டு சொக்க வைத்த ஐஷ்வர்யா ராஜேஷ்


இந்த வீடியோவில் பீர் குடிப்பது மூன்று மாணவிகள் அவர்கள் "பீர் குடித்தால் வாசனை வருமா" என்று கேட்டபடியே குடித்து பேருந்தில் அலப்பறை செய்துள்ளார்கள். மேலும், இவர்கள் மது அருந்தும் வீடியோவில் அவர்கள் முகம் தெளிவாக பதிவாகி உள்ளது.


இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இத்தகைய செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.